சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணிய நபர் கைது

சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணிய நபர் கைது

by Staff Writer 30-04-2019 | 10:00 AM
Colombo (News 1st) கல்முனை - மருதமுனை, அஷ்ரப் வீதிப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் அண்மைக் காலமாகத் தொடர்புகளைப் பேணிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபர் வசமிருந்த மார்க்க நூலாகக் கருதக்கூடிய 3 குர்ஆன்களும் கையடக்கத் தொலைபேசி, சிம் அட்டைகள் உள்ளிட்ட மேலும் பல உபகரணங்களை கைப்பற்றியதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அம்பாறையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அண்மையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கள் தொடர்பிலான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தொலைபேசிகளின் வழியே பகிர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.