சாய்ந்தமருது வெடிச்சம்பவம்: சந்தேகநபர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வேன் கைப்பற்றப்பட்டது

by Bella Dalima 30-04-2019 | 3:20 PM
Colombo (News 1st) அம்பாறை - சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வேன் கெக்கிராவை - இஹல புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. 250/5680 என்ற இலக்கத்தில் குறித்த வேன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். வேனின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.