தேசிய பூங்காக்களைப் பார்வையிட அனுமதி

தேசிய பூங்காக்களுக்கு பிரவேசிக்க மற்றும் பார்வையிட அனுமதி

by Staff Writer 29-04-2019 | 5:09 PM
Colombo(News 1st) அனைத்துத் தேசிய பூங்காங்களுக்கும் பிரவேசிப்பது மற்றும் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலா விடுதிகளை வழமைபோன்று ஒதுக்கீடு செய்ய முடியும் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.பி. சூரியபண்டார தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான ஒத்துழைப்பும் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வழமைபோன்று பூங்காங்களை பார்வையிடுவதற்காக வருகைதர முடியும் எனவும் எம்.ஜி.பி. சூரியபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.