பொலிஸ்மா அதிபருக்கு கட்டாய விடுமுறைக்கான கடிதம்

கட்டாய விடுமுறைக்கான கடிதம் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

by Staff Writer 29-04-2019 | 6:34 PM
Colombo(News 1st) கட்டாய விடுமுறைக்கான கடிதம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், கட்டாய விடுமுறைக்கான கடிதம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு இன்று (29ஆம் திகதி) கிடைத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கான கடிதத்தை, ஜனாதிபதியிடமிருந்து இன்று முற்பகல் பெற்றுக்கொண்டார். அவர் இதற்கு முன்னர், பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக விடயங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.