இலங்கை தாக்குதல்களை தொடர்ந்து உஷாராகும் இந்தியா

இலங்கை தாக்குதல்களை தொடர்ந்து உஷாராகும் இந்தியா

by Fazlullah Mubarak 29-04-2019 | 9:11 AM

Colombo (News 1st) நாட்டில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இந்தியாவின் பெங்களூருவிலுள்ள வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கெமராக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தனியார் காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதேவேளை, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும் எனவும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகளில் தங்குபவர்களிடம் நிரந்தர முகவரி, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் பெற வேண்டும் எனவும் உடமைகளை சோதனையிடுவதற்கு ஸ்கேனர் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தவிர, சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம், பெங்களூர் சின்னசுவாமி மைதானம் உள்ளிட்டவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.