அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கை

அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கை

by Staff Writer 29-04-2019 | 8:34 PM
Colombo(News 1st) தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்களுக்காக நாட்டிற்கு வந்துள்ள அமெரிக்காவின் விசேட நிபுணர்கள், குறுகிய காலத்தில் உரிய நோக்கங்களை அடையும் நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபடுவார்கள் என, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நீண்ட காலம் தங்கிருக்கும் நோக்கம் தமது நிபுணர்களுக்கு இல்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.