அகதிகளுக்கு பாப்பரசர் நிதியுதவி

மெக்ஸிகோவில் தனித்துவிடப்பட்டுள்ள அகதிகளுக்கு பாப்பரசர் நிதியுதவி

by Staff Writer 28-04-2019 | 1:07 PM
Colombo (News 1st) அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்டு மெக்ஸிக்கோவில் தனித்து விடப்பட்டிருக்கும் அகதிகளுக்கு உதவுவதற்காக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், 5 இலட்சம் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையின் பீற்றர்ஸ் பென்ஸ் நிதியத்தினூடாக, உலகளாவிய ரீதியில் சேகரிப்பட்ட பணமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அகதிகளினுடைய பிரச்சினைகள் தொடர்பாக உலக ஊடகங்களினால் வௌிப்படுத்தப்படும் தகவல்கள் குறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களுக்கான முக்கியமான உதவிகள் குறைவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.