'பொனி' சூறாவளியின் தாக்கம் வலுவடையும் சாத்தியம்

'பொனி' சூறாவளியின் தாக்கம் மேலும் வலுவடையும் சாத்தியம்

by Staff Writer 28-04-2019 | 8:53 AM
Colombo (News 1st) இலங்கைக்குத் தென் கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள 'பொனி' சூறாவளி எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவடையும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 'பொனி' சூறாவளியானது, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை கிழக்கு கரையோர கடற்பிராந்தியத்தில் வட மேல் பகுதியூடாக பயணிக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக கடற்பிரதேசங்களில், மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் மறு அறிவித்தல் வரை, வங்காளவிரிகுடா கடற்பிரதேசங்களில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கும் கடல்சார் ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதேவேளை, மேல், தென், சப்ரகமுவ, மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.