இலங்கையின் சுற்றுலாத்துறையை மீளமைக்க ஒத்துழைப்பு

சுற்றுலாத்துறையை மீளமைக்க ஒத்துழைப்பு - சர்வதேச சுற்றுலா அமைப்பு

by Staff Writer 28-04-2019 | 1:00 PM
Colombo (News 1st) இலங்கையின் சுற்றுலாத்துறையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என, சர்வதேச சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை மூலமாக அண்மைக்காலத்தில் உயர்ந்தபட்ச முன்னேற்றத்தை அடைந்திருந்தது. இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் சுற்றுலாத்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை வழமை நிலைக்குக்கொண்டுவர ஒத்துழைப்பதாக சர்வதேச சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது.