அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என கோரிக்கை

அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என கோரிக்கை

by Staff Writer 28-04-2019 | 7:13 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்று (28ஆம் திகதி) அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பாதுகாப்புக் கருதி அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என தாம் அறிவுறுத்தியுள்ளதாக, அமைச்சர் மனோ கணேஷன் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.