by Staff Writer 27-04-2019 | 11:22 AM
Colombo (News 1st) கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் பாதுகாப்புப் பிரிவினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வௌியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 3 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காயமடைந்த பெண்னொருவரும் சிறுமியொருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.