கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் கைது

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது

by Staff Writer 27-04-2019 | 12:21 PM
Colombo (News 1st) கொழும்பு - 2, கொம்பனிவீதி பகுதியில் 46 வாள்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனிவீதி பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 46 வாள்கள், 15 கத்திகள் மற்றும் 25 இராணுவ உடைகள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.