இரவு 10 மணி முதல்  மீண்டும் ஊரடங்கு சட்டம்

இரவு 10 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 27-04-2019 | 3:09 PM
Colombo (News 1st) இன்று (27) இரவு 10 மணி முதல் நாளை (28) காலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். இதேவேளை, மட்டக்களப்பின் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவலக்கடை பகுதிகளில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.