சீருடைக்கான காசோலையின் காலாவதி திகதி நீடிப்பு

முதலாம்தர மாணவர்களின் சீருடைக்கான காசோலையின் காலாவதி திகதி நீடிப்பு

by Staff Writer 27-04-2019 | 1:37 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கு வழங்கப்பட்ட காசோலையின் காலாவதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது. இந்தக் காசோலைக்கான காலாவதி திகதி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையை கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கு வழங்கப்பட்ட காசோலைக்கான காலம் இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்