முல்லேரியாவில் வர்த்தகர் மீது துப்பாக்கிச்சூடு

முல்லேரியாவில் வர்த்தகர் மீது துப்பாக்கிச்சூடு

by Staff Writer 26-04-2019 | 3:35 PM
Colombo (News 1st) முல்லேரியா வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 38 வயதான வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 7.40 அளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த அடையாளந்தெரியாத மூவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வர்த்தகர் தனது கெப் வாகனத்தை வீட்டின் வாகனத்தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.