கிளிநொச்சியில் சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது

பயங்கரவாத குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு: கிளிநொச்சியில் சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது

by Staff Writer 26-04-2019 | 4:05 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை இராணுவத்தினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், காத்தான்குடி, நொச்சியாகம, கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.