by Staff Writer 26-04-2019 | 6:26 PM
Colombo (News 1st) உயர் பொலிஸ் அதிகாரிகள் 12 பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவர் உள்ளிட்ட 12 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது அதனை இரத்து செய்வதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாதிருப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.