by Staff Writer 26-04-2019 | 4:50 PM
Colombo (News 1st) அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
நிரந்தர வதிவிடங்களில் வசிப்போரை பதிவு செய்யுமாறும் ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அடையாளம் தெரியாதவர்கள் சில பகுதிகளில் தங்கியுள்ளதால் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.