வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் வலுப்பெற்றுள்ளது

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் வலுப்பெற்றுள்ளது: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 25-04-2019 | 5:14 PM
Colombo (News 1st) நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பிராந்தியங்களில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் கடற்படையினரும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் வலுப்பெற்றுள்ளதால் குறித்த கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார். கடற்பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.