ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை

மறு அறிவித்தல் வரை ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை

by Staff Writer 25-04-2019 | 9:28 AM
Colombo (News 1st) உடன் அமுலுக்குவரும் வகையில் ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட விமானங்கள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்கீழ், தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களும் உடன் அமுலுக்குவரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதன்படி, மறு அறிவித்தல் விடுக்கும் வரை, ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட விமானங்களை அனுப்புவதைத் தவிர்க்குமாறும், சிவில் விமான சேவைகள் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.