பூகொட பகுதியிலுள்ள காணியொன்றில் வெடிச்சம்பவம்

by Staff Writer 25-04-2019 | 9:48 AM
Colombo (News 1st) பூகொட பகுதியிலுள்ள பாழடைந்த காணியொன்றில் வெடிச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார். கம்பஹா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.