by Staff Writer 25-04-2019 | 3:55 PM
Colombo (News 1st) கொழும்பு முகத்துவாரம் பகுதியில் வெடிபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று பகல் முகத்துவாரம் பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, 6 வாள்களும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட 21 கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.