குண்டுகளைக் கொண்டு செல்ல பயன்பட்ட லொறி கைப்பற்றல்

குண்டுகளைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லொறி கைப்பற்றப்பட்டுள்ளது

by Staff Writer 25-04-2019 | 7:53 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் போது, குண்டுகளைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்று வத்தளை - நாயகந்த பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. நாயகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே லொறி கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று பகல் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது. DAE 4197 என்ற இலக்கத்தகடுடன் கைப்பற்றப்பட்டுள்ள குறித்த லொறி, கடந்த 21 ஆம் திகதி கொழும்பு சங்க்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்டவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்