முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் விதுஷா லக்சானி

23 ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகள்: முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார் விதுஷா லக்சானி

by Staff Writer 24-04-2019 | 10:19 PM
Colombo (News 1st) 23 ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் இம்முறை இலங்கைக்கு முதல் பதக்கத்தை விதுஷா லக்சானி ஈட்டிக்கொடுத்தார். மகளிருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் அவர் வெண்கலப்பதக்கம் வென்றார். 23 ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகள் கட்டாரின் கலிபா விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன. இதில் மகளிருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் 13.53 மீட்டர் தூரத்திற்கு பாய்ந்த விதுஷா லக்சானி வெண்கலப்பதக்கம் வென்றார். இது இம்முறை ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் இலங்கை வெற்றிகொண்ட முதல் பதக்கமாகும். உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விதுஷா லக்சானி கறுப்புப்பட்டி அணிந்து போட்டியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.