வௌ்ளவத்தையில் மோட்டார்சைக்கிள் பொலிஸாரால் வெடிக்கவைக்கப்பட்டது

by Staff Writer 24-04-2019 | 10:48 AM
Colombo (News 1st) வௌ்ளவத்தை, சவோய் திரையரங்கிற்கு அருகில் சந்தேகித்துக்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்றை ​சோதனையிடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதுகாப்புப் பிரிவினர், குறித்த மோட்டார்சைக்கிளின் இருக்கையை வெடிக்கச்செய்து, அதனைத் திறப்பதற்கு முற்பட்டுள்ளனர்.
இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.