மாதம்பையில் எகிப்து நாட்டு பிரஜை கைது

மாதம்பையில் எகிப்து நாட்டு பிரஜை கைது: தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளாரா என விசாரணை

by Staff Writer 24-04-2019 | 4:51 PM
Colombo (News 1st) மாதம்பை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையிலிருந்து எகிப்து நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் விசாவோ கடவுச்சீட்டோ இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கிடைத்த தகவல்களுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளுக்கு குறித்த சந்தேகநபர் பயிற்சிகளை வழங்கியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரின் முகம், கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் முகத்தை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எகிப்து நாட்டை சேர்ந்த 44 வயதான குறித்த சந்தேகநபர் நாளை (25) சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.