மதூஷுடன் கைது செய்யப்பட்ட மற்றொருவர் நாடு கடத்தப்பட்டார்

by Staff Writer 24-04-2019 | 10:33 AM
Colombo (News 1st) பாதாள உலகக்குழுத் தலைவரான மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட அபூபக்கர் மொஹம்மட் பதுர்தீன் என்பவர் நாடுகடத்தப்பட்டுள்ளார். அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்றைய தினம் துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டதன் பின்னர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் விசாரணைகளின் பின்னர் இன்று (24ஆம் திகதி) காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.