பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபரை கைது செய்யுமாறு விஜயதாச ராஜபக்ச வேண்டுகோள்

by Staff Writer 24-04-2019 | 1:11 PM
Colombo (News 1st) பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை உடன் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, ஜனாதிபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். கடந்த 4ஆம் திகதி புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கிய நிலையிலும், அந்தத் தகவலை நாட்டுத் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவிக்காமல் பாரிய அழிவு ஏற்படுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தெரிந்தே குற்றமிழைத்துள்ளதாக விஜயதாச ராஜபக்ச குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக இனங்காணப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர்கள் இருவரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்