சர்வகட்சி மற்றும் சர்வமத மாநாட்டிற்கு அழைப்பு

சர்வகட்சி மற்றும் சர்வமத மாநாட்டிற்கு ஜனாதிபதி அழைப்பு

by Staff Writer 24-04-2019 | 5:26 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை (25) காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வமத மாநாடொன்றுக்கும் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வமத மாநாடு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.