வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

by Staff Writer 23-04-2019 | 1:22 PM
Colombo (News 1st) வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்திச் செல்வதாயின், தொலைபேசி இலக்கம் மற்றும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணத்தை வாகனத்தின் முற்பகுதியில் காட்சிப்படுத்திவிட்டு செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வீதியோரங்களில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய, சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதனால் ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்த்துக்கொள்வதற்கு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.