மியன்மார் சுரங்கத்தில் நிலச்சரிவு

மியன்மார் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50-இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என தகவல்

by Bella Dalima 23-04-2019 | 5:58 PM
மியன்மாரில் பச்சை மாணிக்கக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 50-இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என தகவல் வௌியாகியுள்ளது. மியன்மாரின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்கக்கற்களை வெட்டியெடுக்கும் சில சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஒரு சுரங்கத்தில் இன்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்போது, சுமார் 55 தொழிலாளர்கள் சுரங்கத்தின் ஆழமான பகுதியில் இருந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.