பாராளுமன்றம் இன்று கூடியது: கூச்சலுக்கு மத்தியில் பிரதமர் உரையாற்றினார்

by Staff Writer 23-04-2019 | 10:17 PM
Colombo (News 1st) அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு பாராளுமன்றம் இன்று கூடியது. பாராளுமன்ற சபை அமர்வின் ஆரம்பத்தில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி அனுப்பிய அறிவித்தலை சபாநாயகர் வாசித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக, பாதுகாப்பு பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் சபாநாயகர் கூறினார். அதனைத் தொடர்ந்து தற்போதைய நிலை தொடர்பில் பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றவிருந்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறப்புரிமை கேள்வியொன்றை எழுப்புவதற்கு முயன்ற போதிலும், அதற்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்காமையினால் அமளிதுமளி ஏற்பட்டது. எனினும், கூச்சலுக்கு மத்தியில் பிரதமர் தனது உரையை நிகழ்த்தினார். காணொளியில் காண்க...