தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கமே தாக்குதலை மேற்கொண்டது

தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது: ருவன் விஜேவர்தன

by Bella Dalima 23-04-2019 | 4:26 PM
Colombo (News 1st) நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரிலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களை தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் மேற்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள், விடுதிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில் 38 வௌிநாட்டவரும் அடங்குவர். தாக்குதலில் காயமடைந்த 480-க்கும் அதிகமானோர் தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை, கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு வைத்தியசாலைகளிலும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய செய்திகள்