அனைத்து அரச பாடசாலைகளும் 29ஆம் திகதி ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகளும் 29ஆம் திகதி ஆரம்பம்

by Staff Writer 23-04-2019 | 12:01 PM
Colombo (News 1st) அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் 29ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைக்காக நேற்று (22ஆம் திகதி) பாடசாலை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் நேற்றும் இன்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.