by Fazlullah Mubarak 22-04-2019 | 2:35 PM
Colombo (News 1st) இலங்கையின் வட கிழக்கு கடற்பிராந்தியத்தில் 275 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகிக்கபடும் போதைப்பொருளுடன் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகு மேலதிக விசாரணைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்படுகின்றது.