by Fazlullah Mubarak 22-04-2019 | 9:13 AM
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளை பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதியே பாராளுமன்றம் கூடவிருந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையினை கருத்தில்கொண்டு நாளை பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கு அமையவே பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது.