நீர் தொடர்பில் அச்சம் வேண்டாம்! வதந்தியை நம்பாதீர்

குடிநீர் தொடர்பில் அச்சம் வேண்டாம் - வதந்திகளை நம்பாதீர்

by Fazlullah Mubarak 22-04-2019 | 2:32 PM

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குழாய் மூலம் விநியோகிக்கின்ற நீர், சர்வதேச தரத்துடன் உள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நீரின் தன்மை தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். இதன்காரணமாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விநியோக்கிக்கும் நீரை பருகுவதில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.