குண்டுத்தாக்குதலை ஆராய குழு அமைத்தார் ஜனாதிபதி!

குண்டுத்தாக்குதல் குறித்து ஆராய குழு அமைத்தார் ஜனாதிபதி

by Fazlullah Mubarak 22-04-2019 | 2:29 PM

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி, மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் என் கே. இலங்ககோன் ஆகியோர் இந்த விசேட மூவரடங்கிய குழுவில் அங்கம் வகிக்கின்றனர். தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த மூவரடங்கிய குழுவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.