தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் மூவர் பலி

தெமட்டகொட பகுதியில் வெடிப்புச் சம்பவத்தில் மூவர் பலி

by Staff Writer 21-04-2019 | 3:09 PM
Colombo (News 1st) தெமட்டகொட பகுதியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தெமட்டகொடயில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வீடொன்றை சோதனையிட சென்ற தெமட்டகொட பொலிஸார் மூவரே உயிரிழந்துள்ளனர்.