இரத்த தேவைப்பாடு அதிகரித்துள்ளதாக அறிவிப்பு

இரத்த தேவைப்பாடு அதிகரித்துள்ளதாக அறிவிப்பு

by Staff Writer 21-04-2019 | 12:53 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமை காரணமாக இரத்த தேவைப்பாடு அதிகரித்துள்ளதாக, தேசிய இரத்த கொடையாளர் சேவை தெரிவித்துள்ளது. களஞ்சியசாலைகளில் இரத்தம் குறைவடைந்துள்ளதால் இரத்த கொடையாளர்கள் இயலுமானவரை நாரஹேன்பிட்ட மத்திய நிலையத்திற்கு வருமாறு தேசிய இரத்த கொடையாளர் சேவை குறிபிபிட்டுள்ளது. இதனைத்தவிர, மட்டக்களப்பு, பொலன்னறுவை, நீர்கொழும்பு, திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளிலுள்ள இரத்த வங்கிகளிலும் குருதியை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்