நீர்வீழ்ச்சியில் காணாமற்போன இளைஞரின் சடலம் மீட்பு

கலபொட எல்ல நீர்வீழ்ச்சியில் காணாமற்போன இளைஞரின் சடலம் மீட்பு

by Staff Writer 19-04-2019 | 4:07 PM
Colombo (News 1st) நாவலப்பிட்டி - கலபொட எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கலபொட எல்லவை பார்வையிடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று (18) மாலை நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமற்போயுள்ளார். பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய, சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். கம்பளையை சேர்ந்த 19 வயதான இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.