முதல் போட்டியில் மக்காவோவுடன் மோதுகிறது இலங்கை

உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: முதல் போட்டியில் மக்காவோவுடன் மோதுகிறது இலங்கை

by Staff Writer 19-04-2019 | 9:20 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான ஆசிய வலய அணிகளைத் தெரிவு செய்யும் தகுதிகாண் சுற்றின் அணிப்பிரிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிய வலயத்தின் 12 அணிகள் இந்த தொடரில் போட்டியிடவுள்ளன. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மக்காவோ, மங்கோலியா, புரூனை, லாஓஸ், மலேஷியா, திமோர் லெஸ்டே, கம்போடியா, பூட்டான், குவாம் ஆகிய நாடுகளே அவையாகும். தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் மக்காவோவுடன் மோதவுள்ளது.