இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

by Staff Writer 19-04-2019 | 3:54 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இடி மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஏனைய செய்திகள்