10 பேரின் உயிரை காவு கொண்ட விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியின் அனுமதிப்பத்திரம் இரத்து

by Staff Writer 18-04-2019 | 4:28 PM
Colombo (News 1st) மஹியங்கனை பகுதியில் 10 பேரின் உயிரை காவு கொண்ட விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒரு சாராரான தனியார் பஸ்ஸின் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.