by Staff Writer 18-04-2019 | 4:21 PM
Colombo (News 1st) மக்களின் விருப்பமின்றி எவ்விதப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச சதியில் ஈடுபட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
வலஸ்முல்ல புதிய பஸ் தரிப்பிடத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.