by Chandrasekaram Chandravadani 18-04-2019 | 8:30 AM
Colombo (News 1st) போர்த்துக்கல்லின் மடெய்ரா (Madeira) தீவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் 55 பேரை ஏற்றிச்சென்ற குறித்த பஸ் போர்த்துக்கல்லின் மடெய்ரா தீவில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, விபத்தில் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வௌியிட்டுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இந்த விபத்தை விபரிப்பதற்கு தன்னிடம் வார்த்தைகள் இல்லை எனத் தெரிவித்துள்ள உள்ளூர் மேயர் பிலிப் சௌஸா பாதிக்கப்பட்ட மக்களை என்னால் பார்க்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.