பன்னிப்பிட்டியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ

பன்னிப்பிட்டியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ

by Staff Writer 18-04-2019 | 7:44 AM
Colombo (News 1st) பன்னிப்பிட்டி, அம்பகஸ்ஹதரசந்தி பகுதியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பட்டுள்ளதாக, ஶ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகரசபை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று (18ஆம் திகதி) அதிகாலை பரவிய இந்தத் தீயை கட்டுப்படுத்துவதற்கு தெஹிவளை தீயணைப்புப் பிரிவின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.