பண்டிகைக் காலத்தில் 320 மில்லியன் ரூபா வருமானம்

பண்டிகைக் காலத்தில் 320 மில்லியன் ரூபா வருமானம்

by Staff Writer 18-04-2019 | 7:50 AM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் கடந்த 12 நாட்களுக்குள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 320 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீத அதிகரிப்பாகும் என அதிவேக நெடுஞ்சாலையின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதிக்குள் சுமார் 12 இலட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலை வீதியூடாக பயணித்துள்ளன. இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 11 ஆம் திகதியே அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையூடாக பயணித்துள்ளன. கடந்த 11 ஆம் திகதி 1,10,000க்கும் அதிகமான வாகனங்கள் பயணித்துள்ளதுடன், அன்றைய தினம் மாத்திரம் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.