மதூஷின் உறவினர் உட்பட அறுவர் நாடு கடத்தப்பட்டனர்

மதூஷின் உறவினர் உட்பட அறுவர் நாடு கடத்தப்பட்டனர்

by Staff Writer 17-04-2019 | 7:02 AM
Colombo (News 1st) துபாயில் மாகந்துரே மதூஷூடன் கைது செய்யப்பட்ட அவரின் உறவினர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் இன்று (17ஆம் திகதி) அதிகாலை நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் இன்று அதிகாலை 4.50 மணியளவில் துபாயிலிருந்து நாட்டை வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டை வந்தடைந்த சந்தேகநபர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை, மாகந்துரே மதூஷூடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 21 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.