மகள் தாக்கியதில் தாய் உயிரிழப்பு

மகள் தாக்கியதில் தாய் உயிரிழப்பு

by Staff Writer 17-04-2019 | 2:25 PM
Colombo (News 1st) கஹவத்த - மடலகம பகுதியில் பெண்ணொருவர் தமது பெற்றொரை பொல்லால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண்ணின் பெற்றோர் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து 52 வயதான தாய், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கஹவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்